Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்க இந்த ஆட்டத்திற்கு வரல: ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் குறித்து ஜி.கே.வாசன் கருத்து

Webdunia
வெள்ளி, 29 மே 2015 (05:40 IST)
சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தமாக போட்டியிடாது என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.


 
சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு அடுத்த ஜூன் 27 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.
 
இந்த தேர்தலில் அதிமுக சார்பில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நிற்பதற்கான ரகசிய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக, இந்த இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று திமுக அறிவித்துவிட்டது. இதைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியும் போட்டியிடவில்லை என கூறியது.
 
இந்நிலையில், தஞ்சையில் தாமக மாநில தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தமாக போட்டியிடாது. மேலும், அந்த தொகுதியில் நிற்கும் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கமாட்டோம். இடைத் தேர்தலை சந்திப்பது எங்கள் நோக்கமல்ல. எங்களது இலக்கு 2016 ஆவது ஆண்டுபேரவைத் தேர்தல் தான் என ருத்து தெரிவித்துளார்.

சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை கொரோனாவால் பாதிப்பா? பொது சுகாதாரத்துறை விளக்கம்..!

ரேவண்ணா பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு, சிறப்பு புலனாய்வு குழு கடிதம்

மைசூருவில் நடிகை குத்திக் கொலை..! கணவருக்கு போலீசார் வலைவீச்சு..!!

இன்னும் சிலமணி நேரத்தில் 20 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

தமிழகத்தின் தண்ணீர் தேவை அண்டை மாநிலங்களை சார்ந்து உள்ளது- எடப்பாடி பழனிச்சாமி!

Show comments