Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளத்தால் வீட்டுக்கடன் அபராதத்தை ரத்து செய்த எச்டிஎப்சி வங்கி

Webdunia
சனி, 5 டிசம்பர் 2015 (14:27 IST)
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தங்களது வாடிக்கையாளர்களின் வீட்டு கடன் தவணையின் அபராதத் தொகையை ரத்து செய்யப்படுவதாக எச்.டி.எப்.சி வங்கி அறிவித்துள்ளது.


 


சென்னையில் பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தால்  பலர வீடுகள் தண்ணீரில் மூழ்கி விட்டது. முடிச்சூர், ஊரப்பாக்கம் உள்ளிட்ட புறநகரங்களில் சிலரது வீடுகள் இடிந்து வீதிக்கு வந்துவிட்டனர்.  இந்நிலையலில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தங்களது வாடிக்கையாளர்களுக்கு, வீட்டு கடன் தவணையின் அபராதத் தொகையை ரத்து செய்யப்படுவதாக எச்.டி.எப்.சி வங்கி அறிவித்துள்ளது.
 
இந்நிலையல், நவம்பர் மாதத்திற்கான அபாரதத் தொகையை ரத்து செய்துள்ள எச்.டி.எப்.சி வங்கி, மேலும் வெள்ளத்தால் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு ஏற்பட்ட சேதத்தை நிவர்த்தி செய்ய, உடனடி வீட்டு மேம்பாட்டு கடன்களான  குயிக் ஹோம் இம்ப்ரூவ்மெண்ட் லோன்களையும் வழங்கவும் நிர்வாகம் முடிவுசெய்துள்ளது.

இந்த வகை கடன்கள் அனைத்திற்கும் எவ்வித பிராசசிங் கட்டணங்களும் கிடையாது. 
வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் சமர்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு மட்டுமே இந்த விதிமுறை செல்லுபடியாகும் என்றும் எச்.டி.எப்.சி வங்கி அறிவித்துள்ளது.
 

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments