Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் வசதி: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அசத்தல்

Webdunia
திங்கள், 30 செப்டம்பர் 2019 (19:14 IST)
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மெட்ரோ நிர்வாகம் பல்வேறு புதுப்புது வசதிகளை செய்து தருகிறது. பயணிகளுக்கு சைக்கிள், குறைந்த விலையில் கேப் வசதி, குறைந்த கட்டணத்தில் பார்க்கிங் வசதி உள்பட பல்வேறு வசதிகளை செய்து தரும் மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தற்போது மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் வசதியையும் செய்து தந்துள்ளது
 
 
இந்த வசதி முதல்கட்டமாக சென்னை நந்தனம் மெட்ரோ ரயில்வே நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதே வசதி படிப்படியாக  அண்ணாநகர் கிழக்கு, கோயம்பேடு மற்றும் உயர்நீதிமன்ற மெட்ரோ ரயில் நிலையங்களில் தொடங்கப்படவுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது
 
 
மெட்ரோ பயணிகள் தங்களுடைய மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்ய வேண்டும் என்றால் முதலில் கூகுள் பிளே ஸ்டோர் சென்று ELECTREEFI என்ற செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும் பின்னர் சார்ஜ் செய்யும் நேரத்தை முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
 
மத்திய அரசு ஏற்கனவே மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் ஜிஎஸ்டி வரி குறைப்பு உள்பட பல்வேறு வசதிகளை செய்து தரும் நிலையில் தற்போது மெட்ரோ ரயில் நிலையமும் சார்ஜ் வசதியை செய்து தருவதால் இன்னும் ஒருசில ஆண்டுகளில் மக்களிடையே மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிம்மில் பரிந்துரை செய்த ஊக்கமருந்து.. 3 நாட்கள் சிறுநீர் வெளியேறாமல் உயிரிழந்த வாலிபர்..!

7 நாட்களில் 23 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்.. 19 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!

காற்றழுத்த தாழ்வுநிலை ஒரு பக்கம் இருக்கட்டும்.. இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும்..!

அரை மணி நேரத்தில் ஆதாரங்களை ஒப்படையுங்கள்.. சீமான் வழக்கில் நீதிபதி உத்தரவு..!

டாஸ்மாக் வழக்கு: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments