Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் விடாமல் பெய்யும் மழை: உடனடி உதவிக்கு வாட்ஸப் சேவை!

Webdunia
ஞாயிறு, 1 டிசம்பர் 2019 (09:32 IST)
சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் மூன்று நாட்களுக்கு மிதமான மற்றும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் நேற்று மாலையிலிருந்தே பல பகுதிகளில் விடாமல் மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் சென்னையில் பல இடங்களில் மழை நீர் தேங்கவும், வெள்ள பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பிருப்பதால் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மழை வெள்ள பாதிப்புகளை கண்காணிக்கவும், நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் மாநகராட்சி 24 மணிநேர கட்டுப்பாட்டு அறையை தொடங்கியுள்ளது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்கி இருந்தால் 044-25384520, 044-25384530, 044-25384540 மற்றும் 94454-77205 என்ற வாட்ஸப் எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments