Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Siva
வெள்ளி, 31 மே 2024 (13:52 IST)
தமிழகத்தில் நாளை 9 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை உள்பட வட தமிழக மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கடும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது என்பதும் அக்னி நட்சத்திரம் முடிவடைந்த பின்னரும் வெயிலும் தாக்கம் குறைவில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது. 
 
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஓரளவு மழை பெய்து வருவதால் வெப்பநிலை சீராக உள்ளது என்றும் குறிப்பாக கேரளாவை ஒட்டிய பகுதிகளில் தட்பவெட்ப நிலை குளிர்ச்சியாக இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் நாளை கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 9 மாவட்டங்களில் நாளை கன மழை பெய்யும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. 
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று தரப்படும்..! முதல்வர் ஸ்டாலின் உறுதி.!!

மீண்டும் தங்கம் விலை 500 ரூபாய் உயர்ந்ததா? சென்னையில் இன்றைய நிலவரம்..!

ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கல் தான் ஆம்ஸ்ட்ராங் கொலையா? தீவிர விசாரணை..!

அமித்ஷாவுடன் திமுக எம்பி திருச்சி சிவா திடீர் சந்திப்பு.. என்ன காரணம்?

ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து தவெக தலைவர் விஜய் கண்டனம்.. என்ன சொன்னார் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments