Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று காலை 10 மணி வரை இடி மின்னலுடன் மழை பெய்யும்: 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

Siva
வியாழன், 27 ஜூன் 2024 (08:10 IST)
தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை  வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டங்களில் இடியுடன் லேசான மழைக்கு வாய்ப்பு  என்றும், தமிழகத்தின் 9 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும்  என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 
மேலும் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் மழை  வாய்ப்பு என்றும், திண்டுக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் காலை 10 மணி வரை  மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
 
மேலும் நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று அதாவது ஜூன் 27ஆம் தேதி விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார்.
 
மேலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை இன்று மாலை அளவு அல்லது இரவு பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பு: விஜய் முக்கிய கோரிக்கை

எந்த கூட்டணியாக இருந்தாலும் 40 வேண்டும்: உறுதியாக இருக்கும் தேமுதிக..

அமைச்சர் மா சுப்பிரமணியன் மீது நில மோசடி வழக்கு: சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

இதுக்கு இல்லையா ஒரு முடிவு? பாரிஸ் செல்லும் ஏர் இந்தியா விமானமும் ரத்து!

பரிகார பூஜை என்ற பெயரில் கொடூரம்: கோயிலில் பெண் பாலியல் வன்கொடுமை - பூசாரி தலைமறைவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments