Webdunia - Bharat's app for daily news and videos

Install App

14 நாட்களில் கொரோனா உச்சம் அடையும்! – சென்னை ஐஐடி கணிப்பு!

Webdunia
திங்கள், 24 ஜனவரி 2022 (08:20 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் அடுத்த 14 நாட்களுக்குள் உச்சம் அடையும் என சென்னை ஐஐடி கணித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா பரவல் குறித்து சென்னை ஐஐடி மேற்கொண்ட ஆய்வின் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி தமிழகத்தில் ஆர் வேல்யூ என்கிற கொரோனா பரவல் விகிதமானது ஜனவரி 14 முதல் 21 வரை 1.57 சதவீதமாக உள்ளது. அதற்கு முந்தைய ஜனவரி 7 முதல் 13 வரை 2.2 சதவீதமாக இருந்துள்ளது.

மும்பை, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் இந்த பரவல் வீதம் 1.0 க்கும் கீழ் உள்ளது. இதனால் சென்னை ஐஐடி கணிப்பின்படி அடுத்த 14 நாட்களுக்கு தமிழகத்தில் கொரோனா உச்சத்தை தொடும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசார தேதி அறிவிப்பு..!

அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட உரையை மீண்டும் சேர்க்க வேண்டும்: ராகுல் காந்தி கடிதம்..!

மகளிர் உரிமைத்தொகை.. மேல்முறையீடு செய்தவர்களில் 1.48 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்பு..!

பேனரில் ஜெயலலிதா புகைப்படம்..! விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமகவுக்கு அதிமுக ஆதரவு.?

பானிபூரியில் புற்றுநோய் உண்டாக்கும் வேதிப்பொருள்! உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments