Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ்.பி.வேலுமணி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Webdunia
புதன், 30 நவம்பர் 2022 (15:04 IST)
முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்பி வேலுமணி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது. 
 
முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்பி வேலுமணி மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பதும் இந்த வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது 
 
இந்த தீர்ப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது என கூறிய சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து இந்த வழக்கு தொடர்ந்து நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

மத்திய அமைச்சர் ஆகிறாரா சௌமியா அன்புமணி.. 2026ல் வேற ஒரு கணக்கு..!

நெல் கொள்முதல் அளவு குறைந்தது ஏன்.? ஆய்வு செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!

கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்.! திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை.!

அடுத்த கட்டுரையில்
Show comments