Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண சம்பவம்.. தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த ஐகோர்ட்..!

Mahendran
திங்கள், 1 ஜூலை 2024 (11:40 IST)
சமீபத்தில் கள்ளக்குறிச்சியை நிகழ்த்த கள்ளச்சாராயம் மரணங்கள் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்த விவகாரம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாராயம் குடித்ததால் 60க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்த நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரண சம்பவத்தை தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது. கல்வராயன் மலைப்பகுதி மக்களின் பொருளாதார சமூக மேம்பாட்டுக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தாமாக முன்வந்து இந்த வழக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது’

மேலும் இந்த வழக்கின் எதிர்மனுதாரர்களாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர், மத்திய மாநில பழங்குடியினர் நலத்துறை மற்றும் டிஜிபி சேர்க்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பதவியேற்ற மறுநாளே சிக்கல்.. ஹேமந்த் சோரன் முதல்வர் பதவி தப்புமா?

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்..! இந்திய வீரர்கள் 4-பேர் வீர மரணம்.!!

கூலிப்படைகளின் தலைநகரமாக சென்னை மாறி இருக்கிறது: அண்ணாமலை

ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி.. முப்படைகள் வரவேற்பு.. புதினுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி.. அமலாக்கத்துறைக்கு முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments