Webdunia - Bharat's app for daily news and videos

Install App

90 நாள் அதிகம் 2 வாரத்துல முடிச்சு விடுங்க! – அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

Webdunia
வெள்ளி, 13 மார்ச் 2020 (13:15 IST)
தமிழகத்தில் சீல் வைக்கப்பட்ட குடிநீர் ஆலைகளுக்கு உரிமம் வழங்குவது தொடர்பான 90 நாள் அவகாச கோரிக்கையை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்.

தமிழகம் முழுவதும் அரசின் அனுமதி பெறாமல் இயங்கி வந்த குடிநீர் ஆலைகளை மூட உத்தரவிட்டதன் பேரில் 400க்கும் மேற்பட்ட குடிநீர் ஆலைகள் சீல் வைக்கப்பட்டன. அரசின் இந்த முடிவுக்கு எதிராக குடிநீர் ஆலைகள் உரிமையாளர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், அனுமதி பெறாத குடிநீர் ஆலைகளுக்கு அனுமதி தருவது குறித்து தமிழக அரசுக்கு பரிசீலனை செய்தது.

இதுகுறித்து பரிசீலனை செய்ய 90 நாட்கள் கால அவகாசம் கோரி தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் 90 நாட்கள் அவகாசம் வழங்கமுடியாது எனவும் இரண்டு வாரங்களுக்கும் விண்ணப்பிக்கும் குடிநீர் ஆலைகளுக்கு அனுமதி அளிக்க பரிசீலிக்குமாறும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments