Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் மாயமான மாணவி மதுரையில் தற்கொலை! – சிக்கிய கடிதம்!

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (15:50 IST)
சென்னையிலிருந்து மாயமான 10ம் வகுப்பு பள்ளி மாணவி மதுரையில் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவான்மியூரில் டிராவல்ஸ் நடத்தி வரும் செந்தில் என்பவரின் மகள் திவ்யதர்ஷினி. அங்குள்ள பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படித்து வந்த மாணவி சரியாக படிக்காததால் பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை 9ம் தேதியன்று சிறுமி வீட்டிலிருந்து மாயமாகியுள்ளார். இதுகுறித்து பெற்றோர் போலீஸில் புகார் அளித்த நிலையில் போலீஸார் சிறுமியை தேடி வந்தனர்.

மதுரையில் அலங்காநல்லூர் அருகே உள்ள குலமங்களம் பகுதியில் ஒருவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். அந்த கட்டிடத்தில் சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கியது குறித்து மதுரை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீஸார் அவரது செல்போனை ஆராய்ந்த போது அவர் சென்னையில் காணாமல் போன திவ்யதர்ஷினி என தெரியவந்துள்ளது.

மேலும் சிறுமி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் எழுதிய கடிதமும் கிடைத்துள்ளது. சிறுமி சென்னையிலிருந்து மதுரை வந்து 4 நாட்கள் கழித்து தற்கொலை செய்து கொண்டது ஏன்? இது தற்கொலைதானா? என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

ஈரோடு கிழக்கில் நடந்தது தான் விக்கிரவாண்டியில் நடக்கும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

மனித விரலை அடுத்து பூரான்.. ஆன்லைன் ஐஸ்க்ரீம் வாங்குவதற்கு அச்சப்படும் பொதுமக்கள்..!

நீட் தேர்வு முறைகேடு.. 4 மாணவர்கள் கைது.. 9 மாணவர்களுக்கு சம்மன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments