Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையின் பிரபல தாதா காதுகுத்து ரவியின் ரூ.11.68 கோடி சொத்துகள் முடக்கம்

Webdunia
வியாழன், 18 பிப்ரவரி 2016 (08:45 IST)
சென்னை தாதா காதுகுத்து ரவியின் ரூ.11.68 கோடி சொத்துக்களை அமலாக்கப்பிரிவு முடக்கியுள்ளது.

சென்னை நகரை கலக்கிய பிரபல தாதா காதுகுத்து ரவி. சென்னை வியாசர்பாடி பி.வி. காலனி பகுதியைச் சேர்ந்த இவர் மீது கொலை, ஆட்கடத்தல், நில அபகரிப்பு உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் உள்ளது.
 
சென்னை கே.கே.நகரில் நடந்த கதிரவன் கொலை வழக்கில் இவர் முக்கிய குற்றவாளியாவார். 
 
இவர் முறைகேடாக சேர்த்த சொத்துகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்க, அமலாக்க பிரிவுக்கு சென்னை நகர காவல்துறையினர் பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில், இது குறித்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து, ரூ.11.68 கோடி மதிப்புள்ள காதுகுத்து ரவியின் சொத்துகளை முடக்கி மத்திய அரசின் அமலாக்கப்பிரவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
 
கே.கே.நகரைச் சேர்ந்த ரௌடி கதிரவன் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த காதுகுத்து ரவி, அண்மையில்தான் சிறையில் இருந்து வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 ஆன்மிக நகரங்களில் மது விற்பனை செய்ய தடை.. அதிரடி உத்தரவு பிறப்பித்த முதல்வர்..!

எடப்பாடி அருகே இளம்பெண், அவரது கணவர் கடத்தல்.. பட்டப்பகலில் நடந்த கொடூரம்..!

10 ரூபாய்க்கு சோறு மோசடி.. 100 கோடி பணம்! சதுரங்க வேட்டை காந்திபாபுவை மிஞ்சிய Scam! - அதிர்ச்சியில் உறைந்த போலீஸ்!

புதிய உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 240 ரூபாய் உயர்வு..!

பொங்கல் பரிசை வந்து வாங்கிக்கோங்க.. போனில் அழைக்கும் ரேஷன் கடை ஊழியர்கள்..!

Show comments