Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் மளிகை பொருட்கள் வாங்க மொபைல் எண்கள்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

Webdunia
திங்கள், 31 மே 2021 (07:05 IST)
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்று முதல் மளிகை பொருட்கள் விற்பனைக்கு அனுமதி என்றும் கடையை திறக்காமல் மொபைல் போன் மூலம் ஆர்டர் பெற்று வீட்டிற்குச் சென்று டெலிவரி செய்யலாம் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது 
 
இந்த நிலையில் சென்னை மாநகராட்சி இதற்கென ஒரு இணைய தளத்தை ஆரம்பித்து அந்த இணையதளத்தில் சென்னையில் உள்ள அனைத்து பகுதிகளில் உள்ள மளிகை கடைகளின் பெயர்கள், சூப்பர் மார்க்கெட்டின்  பெயர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் ஆகியவற்றை அறிவித்துள்ளது
 
இந்த இணையதளத்திற்கு சென்னை மக்கள் சென்று தங்களுடைய பகுதியை தேர்வு செய்து அந்த பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட் அல்லது லோக்கல் கடைகளைத் தேர்வு செய்து அதற்குரிய மொபைல் எண்ணில் தங்கள் தேவைக்குரிய மளிகை பொருட்களை ஆர்டர் செய்தால் வீட்டிற்கே டெலிவரி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
சென்னை மக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் குறிப்பிடப்பட்டிருக்கும் இணையதளத்தில் முகவரி இதோ: http://covid19.chennaicorporation.gov.in/covid/home/ 
 
 

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments