Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.34 கோடி பறிமுதல்!

Webdunia
வியாழன், 22 டிசம்பர் 2016 (12:11 IST)
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.34 கோடி புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சென்னை விமான நிலைய வளாகத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.


 


அப்போது சந்தேகத்திற்கு இடமான 5 பேரிடம் சோதனை நடத்தியதில் புதிய ரூபாய் நோட்டுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ரூ.1.34 கோடி புதிய ரூபாய் நோட்டுகள் இருப்பதை வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றி அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 
இதனை தொடர்ந்து கைப்பற்றப்பட்ட புதிய ரூபாய் நோட்டுகளின் வரிசை எண்ணை வைத்து அவை எந்த வங்கிக் கிளைகளில் இருந்து எடுக்கப்பட்டது என்று விவரத்தை சேகரித்து வருகின்றனர். இதில் பிடிப்பட்டுள்ள 5 பேரிடம் விசாரணை நடத்தியதில் இது ஹவாலா பணம் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் வங்கி அதிகாரிகள் மற்றும் பலர் சிக்குவார்கள் எனவும் கூறப்படுகிறது.
 

பல்லாங்குழி சாலைகளால் பதறும் வாகன ஓட்டிகள்

யூட்யூபர் இர்ஃபான், உதயநிதியோட ப்ரெண்டு.. அதுனால கேஸ் இல்ல! என் மேல 5 கேஸ் இருக்கு! – அதிமுக ஜெயக்குமார் ஆவேசம்!

ஈஷா நவீன எரிவாயு மயான கட்டுமான செயல்பாடுகளை விரைவுபடுத்த கிராம மக்கள் மனு!

போதைப்பொருள் புழக்கத்தை தமிழக அரசு கட்டுப்படுத்த தவறியதாக கூறிSDPI கட்சியினர்சாலை மறியல் போராட்டம்!

தனிச்சு நின்னு ஜெயிச்சு காட்டு.. கட்சிய கலைச்சிட்டு போயிடுறேன்! – அண்ணாமலைக்கு சீமான் சவால்!

அடுத்த கட்டுரையில்
Show comments