Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாதனை மேல் சாதனை படைக்கும் சென்னை விமான நிலையம்

Webdunia
திங்கள், 19 பிப்ரவரி 2018 (08:39 IST)
சென்னை விமான நிலையத்தில் 76-வது முறையாக  கண்ணாடி நொறுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நவீன வசதிகளுடன் கூடிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் கட்ட 2012ம் ஆண்டில் ரூ. 3000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 
 
விமான நிலையத்தில் இதுவரை  மேற்கூரைகள் இடிந்து விழுதல். தானியங்கி கண்ணாடி கதவு உடைதல் என 75 முறை விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த உடைப்பு சம்பவங்களில் 13 பேர் காயமடைந்து உள்ளனர்.
 
இந்நிலையில் 76-வது முறையாக மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் புறப்பாடு பகுதியில் 4-வது நுழைவுவாயில் அருகே கண்ணாடி திடீரென உடைந்து நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்து குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
சென்னை விமான நிலையத்தில் தொடர்ச்சியாக கண்ணாடி நொறுங்கி விழும் சம்பவம் நடைபெற்று வருவதால் மக்கள் விமான நிலையத்திற்கு செல்வதற்கே பயப்படுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

உலக சாதனைக்காக சிகரம் குழுவினர் நடத்திய ஒயிலாட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது!

அடுத்த கட்டுரையில்
Show comments