Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வு: மேலும் ஒரு மாணவி தற்கொலை முயற்சி!

Webdunia
வியாழன், 16 செப்டம்பர் 2021 (14:42 IST)
தமிழகத்தில் நீட் தேர்வு அச்சம் காரணமாக ஏற்கனவே ஒரு மாணவர் மற்றும் இரண்டு மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட நிலையில் இன்று மேலும் ஒரு மாணவி தற்கொலைக்கு முயற்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த அனுசியா என்ற மாணவி கடந்த ஞாயிறன்று நீட் தேர்வு எழுதிவிட்டு வந்ததிலிருந்து சோகமாக இருந்துள்ளார். நீட் தேர்வில் தனக்கு மிகவும் குறைவான மதிப்பெண்கள் கிடைக்கும் என்றும் அதனால் தனது மருத்துவ கனவு தகர்ந்து விடும் என்றும் அவர் பெற்றோரிடம் புலம்பிக்கொண்டு இருந்ததாக தெரிகிறது
 
இந்த நிலையில் இன்று திடீரென அவர் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். 40 சதவீத தீக்காயங்களுடன் இருந்த அவரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
ஏற்கனவே தனுஷ் என்ற மாணவர் மற்றும் கனிமொழி, சௌந்தர்யா ஆகிய இரண்டு மாணவிகள் நீட்தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments