Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் செம்பரம்பாக்கம் ஏரியால் பாதிப்பு? :நீர் வரத்து அதிகரிப்பால் பீதியில் சென்னைவாசிகள்

Webdunia
புதன், 18 மே 2016 (12:11 IST)
சென்னை மழை வெள்ளம் என்பதும் முதலில் நினைவுக்கு வருவது செம்பரம்பாக்கம் ஏரி தான். கடந்த மழை வெள்ளத்தின் போது செம்பரம்பாக்கம் ஏரி எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திறந்துவிட்டதால் ஏற்பட்ட பாதிப்பு பற்றி இன்றும் பேசிக்கொண்டிருக்கிறார்கள் சென்னைவாசிகள்.


 
 
இந்நிலையில் கோடை வெயிலால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த மக்களுக்கு இந்த மழை இதமளித்தாலும், மீண்டும் வெள்ளம் வருமோ என்ற அச்சம் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
 
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள தீவிர குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதே இடத்தில் நீடித்து வருவதால் கனமழை பெய்து வருகிறது.
 
கனமழை பெய்து வரும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் வினாடிக்கு 1000 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 2,460 கன அடியாக உயர்ந்துள்ளது. இதேபோல் சோழவரம் ,பூண்டி ஏரிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சென்னை வாசிகள் பீதியில் உள்ளனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

தொழிற்சாலை பாய்லர் வெடித்து தீ விபத்து: 10 பேர் பலி.. 48 பேர் காயம்..!

மனைவியை அபகரித்து சொத்தையும் கேட்ட கட்சி தலைவர்! ஆள் வைத்து கதை முடித்த காங். பிரமுகர்!

நடிகை கெளதமி சகோதரரும் ஏமாந்துவிட்டாரா? மோசடி செய்த ரியல் எஸ்டேட் நபர் மீது வழக்குப்பதிவு..!

பள்ளி மாணவர்களுக்கு முதல் நாளே பாடநூல்கள் விநியோகம்: பள்ளிக்கல்வித் உத்தரவு

தேர்தல் செலவுக்கு திரட்டிய நிதியில் வீடு கட்டும் கன்னையா குமார்.. இதுதான் புரட்சியா?

அடுத்த கட்டுரையில்
Show comments