பிரதமர் மோடி தமிழகம் வருவதற்கான தேதியில் மாற்றம்.! ஓரிரு நாட்களில் தேதி அறிவிப்பு..!

Senthil Velan
வெள்ளி, 16 பிப்ரவரி 2024 (14:16 IST)
பிரதமர் மோடி தமிழகம் வருவதற்கான தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஓரிரு நாட்களில் அதற்கான தேதி அறிவிக்கப்படும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 
பிரதமர் மோடி வருகிற 25-ந்தேதி தமிழகம் வருவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற உள்ள பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்று பேச உள்ளதாக  பா.ஜ.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
 
இந்த கூட்டத்துக்காக தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 10 லட்சம் தொண்டர்களை திரட்டவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
 
இந்த நிலையில் பிரதமர் மோடி தமிழகம் வருவதற்கான தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ALSO READ: முடக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள்..! தற்காலிகமாக செயல்பட தீர்ப்பாயம் அனுமதி..!!

பிரதமர் வருவதற்கான தேதி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். முறையான நேரத்தில் கூட்டணி குறித்து பேசப்படும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  பிரதமர் மோடி வருகிற 27ஆம் தேதி தமிழகம் வருவார் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!.. காவல்துறை போட்ட கண்டிஷன்!...

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறையின் கடுமையான நிபந்தனைகள்

விமானத் துறையில் இரு நிறுவனங்களின் ஆதிக்கம் ஏன்? ப. சிதம்பரம் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments