Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு.! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா.?

Senthil Velan
வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (15:23 IST)
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் பல மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 
 
இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நீலகிரி, கோவை, திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் இன்றும், தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 115.6 மி.மீ., முதல் 204.4 மி.மீ., வரை மழை பெய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
திருப்பூர், தேனி, கோவை, நீலகிரி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 8 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ALSO READ: தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு..! 4 விருதுகளை அள்ளிய பொன்னியின் செல்வன்.!!
 
மேலும் வருகிற 18-ஆம் தேதி கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 5 மாவட்டங்களில்  கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மைய செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments