அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Webdunia
வியாழன், 3 நவம்பர் 2022 (16:55 IST)
அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை , திருவள்ளூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது, தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குபருவ மழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில்,அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம், உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், நீலகிரி, கோயம்புத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அ தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், இன்று மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

பாலியஸ்டரை பட்டு என ஏமாற்றி திருப்பதி கோவிலுக்கு விற்பனை.. 10 ஆண்டுகால மோசடி கண்டுபிடிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments