Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

Webdunia
சனி, 21 ஜனவரி 2023 (08:36 IST)
இன்று அடுத்த மூன்று மணி நேரத்திற்கு தமிழகத்தின் ஏழு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.


சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை முடிந்துவிட்டது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஜனவரி 20, 21 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

அதன்படி டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டது. நேற்று காலை சென்னை மேகமூட்டமாக காணப்பட்டது. இதனைத்தொடர்ந்து இன்று அடுத்த மூன்று மணி நேரத்திற்கு தமிழகத்தின் ஏழு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெஹல்காம் தாக்குதலுக்கு இந்திய அரசுக்கு எதிராக கிளர்ச்சி தான் காரணம்: பாகிஸ்தான்..!

காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி.. 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.. தேடுதல் வேட்டை தொடர்கிறது..!

மோடியிடம் போய் சொல்.. கணவரை கொன்ற பின் மனைவியிடம் பயங்கரவாதிகள் கூறிய செய்தி..!

ஜம்மு காஷ்மீர் நிலவரம் எப்படி இருக்கு? அமித்ஷாவிடம் கேட்டறிந்த ராகுல் காந்தி..!

விஜய், சீமான், அன்புமணி, பிரேமல்தா கூட்டணி தான் 3வது அணியா? அதிமுக - திமுக கூட்டணிக்கு சிம்மசொப்பனம்?

அடுத்த கட்டுரையில்
Show comments