Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோடு இடைத்தேர்தலில் மத்திய ஆயுதப்படை போலீஸார் பாதுகாப்பு-தலைமை தேர்தல் அதிகாரி

Webdunia
வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (15:41 IST)
ஈரோடு இடைத்தேர்தலில் 2 கம்பெனி மத்திய ஆயுதப்படை போலீஸார் பாதுகாப்பில் ஈடுபடுபடுத்தப்படுவர் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈவேரா உயிரிழந்த நிலையில் அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கப்பட்டுள்ள நிலையில் பிரபலமான கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.

இதில், காங்கிரஸ் சார்பில் மறைந்த  ஈவேரா திருமகனின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதேபோல், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா, ஓபிஎஸ் அணி சார்பில் செந்தில் இன்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.

பலமுனை போட்டி நிலவுவதால், ஈரோடு இடைத்தேர்தலில் 2 கம்பெனி மத்திய ஆயுதப்படை போலீஸார் பாதுகாப்பில் ஈடுபடுவர் என்ற தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அதிமுக ஆட்சியில் ரூ.6,000 கோடி நிலக்கரி ஊழல்.? பிரபல நாளிதழில் அதிர்ச்சி ரிப்போர்ட்.!!

விவோ Y200 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகம்.. என்னென்ன சிறப்பு அம்சங்கள்? விலை என்ன?

அடிக்கிற வெயில் அப்படி..! பாலைவன மண்ணில் பப்படம் சுடும் ராணுவர் வீரர்! – வைரலாகும் வீடியோ!

பாஜக ஆட்சி அமைக்கவில்லை என்றால் அமித்ஷா மகிழ்ச்சியாக இருப்பார்: ப சிதம்பரம்

இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments