Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமிரா: உயர்நீதிமன்றம் பரிசீலனை

Webdunia
செவ்வாய், 10 ஜனவரி 2017 (18:48 IST)
தமிழகத்தில் இயங்கும் அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 

 
பா.ம.க.வைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.பாலு டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதிகள் இது சாத்தியமானதா? என்று கேள்வி எழுப்பினர்.
 
மனுதாரர் தரப்பில், சட்டவிரோத செயல்களை தடுக்கவும், இளம் வயதினர் மது அருந்துவதை தடுக்கவும் கண்காணிப்பு கேமராக்கள் அவசியம் என்று வாதிட்டப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மற்றும் பார்களில் சிசிடிவி கேமரா பொருத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments