Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குகைக்குள் இருந்தாலும் சிங்கம் சிங்கம் தான்: விஜயகாந்த் மகன் தடாலடி!!!

Webdunia
சனி, 23 பிப்ரவரி 2019 (09:30 IST)
தேமுதிக உடன் கூட்டணி வைக்க பல கட்சிகள் முந்தியடிக்கும் வேலையில் குகைக்குள் இருந்தாலும் சிங்கம் சிங்கம் தான் என விஜயகாந்த் மகன் தடாலடியாக பேசியுள்ளார்.
 
அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்துவிட்ட நிலையில் தேமுதிகவுடன் நடத்தி வரும் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
 
இதற்கிடையே மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், நடிகர் ரஜினிகாந்த், திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் விஜயகாந்தை சந்தித்து பேசினர். எல்லா கட்சிகளும் தேமுதிகவை நோக்கி படையெடுப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் கும்பகோணத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய கேப்டனின் மகன் விஜயபிரபாகரன், தேமுதிகவை யாரும் எளிதில் எடைபோட்டு விடவேண்டாம். எல்லா கட்சிகாரர்களும் கேப்டனை நோக்கி படையெடுக்கிறார்கள். இதுவே தேமுதிகவின் பலம். குகைக்குள் இருந்தாலும் சிங்கம் சிங்கம் தான் என அவர் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments