Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாகை - இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் ரத்து: என்ன காரணம்?

Mahendran
வியாழன், 24 அக்டோபர் 2024 (10:53 IST)
தமிழகத்தில் உள்ள நாகை மற்றும் இலங்கையில் உள்ள காங்கேசன்துறை இடையே சமீபத்தில் கப்பல் சேவை தொடங்கப்பட்ட நிலையில் இன்று ஒரு நாள் மட்டும்  நாகை-இலங்கை கப்பல் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
வங்கக் கடலில் டானா புயல் உருவாகியுள்ளதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த கப்பல் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக கப்பல் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
வடக்கு அந்தமான் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியுள்ளது. இந்த புயல் தற்போது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை அதிகாலை கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இந்த நிலையில், புயல் காரணமாக கடலில் சீற்றம் மற்றும் சூறைக்காற்று வீசுவதால், கப்பல் இயக்கத்தில் சிரமம் ஏற்படும் என்றும், அதனால் நாகை-இலங்கை கப்பல் சேவை இன்று ஒருநாள் மட்டும் ரத்து செய்யப்பட்டதாக கப்பல் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் அவசர ஆலோசனை.. முதல்வர் ஆகிறாரா?

இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது டெஸ்லா கார்.. விலை எவ்வளவு தெரியுமா?

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments