நலத்திட்டங்களுக்கு கலைஞர் பெயர் வைக்காமல் கரப்பான்பூச்சி பெயரையா வைக்க முடியும்? - சீண்டிய உதயநிதி ஸ்டாலின்!

Prasanth Karthick
ஞாயிறு, 24 நவம்பர் 2024 (10:59 IST)

தமிழக அரசின் திட்டங்களுக்கு கலைஞர் பெயர் வைப்பது குறித்து பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மறைமுகமாக எடப்பாடி பழனிசாமியை கிண்டல் செய்தும் பேசியுள்ளார்.

 

 

திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள பெரம்பலூர் எம்.பி கே.என்.அருண்நேருவின் அலுவலகத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது தொண்டர்களிடையே பேசிய அவர் “கலைஞரின் கொள்கைகளை, லட்சியங்களை ஒவ்வொரு தொகுதியிலும் கொண்டு சேர்க்கிறோம். எல்லா திட்டங்களுக்கும் கலைஞர் பெயர் வைப்பதா என எடப்பாடி பழனிசாமி கேட்கிறார். நல்ல நல்ல திட்டங்களுக்கு கலைஞர் பெயரை வைக்காமல் கரப்பான்பூச்சி பெயரையா வைப்பது? நான் யாரை சொல்கிறேன் என உங்களுக்கு தெரியும்” என பேசியுள்ளார்.

 

சில நாட்களுக்கு முன்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, அரசு திட்டங்களுக்கு கலைஞர் கருணாநிதி பெயரை வைக்காமல், கரப்பான்பூச்சி போல ஊர்ந்து சென்ற உங்கள் பெயரை வைக்க வேண்டுமா? என எடப்பாடி பழனிசாமியை விமர்சித்திருந்த நிலையில், தற்போது உதயநிதியும் மறைமுகமாக கரப்பான்பூச்சி என்ற பெயரில் குறிப்பிட்டு பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தலில் தி.மு.க. துடைத்தெறியப்படும்: முதல்வர் ஸ்டாலினுக்கு அமித் ஷா சவால்!

புதின் இந்திய வருகையால் டிரம்ப் ஆத்திரம்.. இந்திய அரிசுக்கு வரி விதிக்க திட்டமா?

2 நாளில் சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கும் மேல் சரிவு.. என்ன ஆச்சு இந்திய பங்குச்சந்தைக்கு?

புதுவை விஜய் கூட்டத்திற்கு துப்பாக்கியால் வந்த நபரால் பரபரப்பு.. என்ன நடந்தது?

10 நாட்கள் தங்கம் விலையில் மாற்றமே இல்லை.. எதிர்காலத்தில் ஏறுமா? இறங்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments