Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் கால் டாக்சி ஓட்டுநர்கள் 3 நாள் போராட்டம் அறிவிப்பு.. என்ன காரணம்?

Webdunia
ஞாயிறு, 15 அக்டோபர் 2023 (18:55 IST)
சென்னையில் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் மூன்று நாள் போராட்டம் என அறிவித்துள்ளதால் மூன்று நாட்கள் சென்னையில் கால் டாக்ஸி ஓடாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
கடந்த சில வருடங்களாக  சென்னையில்  பைக் டாக்ஸி அதிகமாகி வருவதை அடுத்து கால் டாக்ஸிகளுக்கு வருமானம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பைக் டாக்ஸிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் அதாவது அக்டோபர் 16,  17 ஆகிய இரண்டு நாட்களும் வாகனங்களை இயக்காமல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப் போவதாக கால் டாக்ஸி ஓட்டுநர்கள் அறிவித்துள்ளனர் 
 
அது மட்டும் இன்றி அக்டோபர் 18ஆம் தேதி எழும்பூரில் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கால் டாக்ஸி ஓட்டுநர்களின் இந்த போராட்டம் காரணமாக மூன்று நாட்கள் டாக்ஸி சேவை பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments