Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகனின் நண்பர்கள் என்று கூறி வீட்டுக்குள் நுழைந்து ரூ.16 லட்சம் நகை-பணம் கொள்ளை

Webdunia
புதன், 6 ஜூலை 2016 (12:34 IST)
சென்னை, சூளை குருதேவ் பேலஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பில், ராஜேஷ்குமார் (48) என்ற தொழிலதிபர் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.


 


மூத்தமகன் லயோலா கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்கிறார். இந்நிலையில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் ராஜேஷ்குமாரின் மனைவியும் அவரது தாயாரும் வீட்டில் தனியாக இருந்தனர். அப்போது மூத்த மகனோடு நண்பர்கள் என்று 3 வாலிபர்கள் உள்ளே நுழைந்தனர். பிறகு வீட்டின் கதவை பூட்டி ராஜேஷ்குமாரின் மனைவி மற்றும் தாயாரை கத்தியைக்காட்டி மிரட்டி, வாயில் துணியை அமுக்கி, கயிற்றால் இருவரையும் கட்டிப்போட்டு பீரோவில் இருந்த ரூ 10 லட்சம் மதிப்புள்ள தங்கநகைகளையும், ரூ 6 லட்சத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து வேப்பேரி காவல்துறையினர் கொள்ளையர்களின் கைரேகையை கைபற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலும் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈஷாவில் பக்தி பரவசத்துடன் நடைபெற்ற தைபூசத் திருவிழா! லிங்க பைரவி திருவுருவத்துடன் பக்தர்கள் பாதயாத்திரை!

ஒரு டாக்டர் கூடவா இல்ல? அடிப்பட்டு வந்த கஞ்சா கருப்பு! - அரசு மருத்துவமனையில் வாக்குவாதம்!

குழந்தைகள் பாதுகாப்பு உட்பட 28 அணிகள்.. பிரசாந்த் கிஷோரை சந்தித்த சில மணி நேரங்களில் தவெக அதிரடி!

பிரியங்கா தொகுதியான வயநாட்டில் நாளை கடையடைப்புக்கு அழைப்பு.. என்ன காரணம்?

ஏஐ தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு இருக்காது: ஏஐ உச்சிமாநாட்டில் பிரதமர் பேச்சு..

அடுத்த கட்டுரையில்
Show comments