Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய புரோக்கர்கள்; 11 பேர் மீட்பு

Webdunia
வியாழன், 16 ஜூலை 2015 (16:16 IST)
சென்னையில் இளம்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய விபசார தரகர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 11 இளம்பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
 
சென்னையில் பல நகரங்களில் விபச்சாரம் நடைபெறுவதாக மத்திய குற்றப்பிரிவின் விபசார தடுப்பு காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவர்கள் நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் திடீர் சோதனை நடத்தினார்கள்.
 
சென்னை வடபழனி, கோடம்பாக்கம், சாலிகிராமம் ஆகிய இடங்களில் நடைபெற்ற சோதனையில் 3 தரகர்களும் கைது செய்யப்பட்டனர். மேலும், இவர்களிடமிருந்து வெளிமாநிலத்தைச் சேர்ந்த 9 இளம்பெண்களும் மீட்கப்பட்டனர்.
 
இதேபோல, சென்னை புறநகர் பகுதியான குமணன் சாவடியில் தரகர் ஒருவரையும், அவரிடமிருந்த 2 இளம்பெண்களையும் காவல் துறையினர் மீட்டனர். மொத்தத்தில், 5 விபசார தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட 11 இளம்பெண்களும் அரசு மறுவாழ்வு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments