Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணப்பெண்ணை ஏற்றுக் கொள்கிறேன்....சிஏஏ - வை நிராகரிக்கிறேன் - போராட்டத்தில் திருமணம் செய்த இளைஞர் !

Webdunia
திங்கள், 17 பிப்ரவரி 2020 (16:05 IST)
மணப்பெண்ணை ஏற்றுக் கொள்கிறேன்....சிஏஏ - வை நிராகரிக்கிறேன் - போராட்டத்தில் திருமணம் செய்த இளைஞர்

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் ( சிஏஏ )குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நான்காவது நாளாக நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தின் போது தம்பதிகளுக்கு இஸ்லாம் முறைப்படி திமணம் செய்து வைக்கப்பட்டது.
 
கடந்த வருடம் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்றது.  அதன்பிறகு, வண்ணாரப்பேட்டையில் இரவில் சிஏஏ (CAA )மற்றும் என்.பி.ஆர் (NPR)எதிர்த்து இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதலை கண்டித்து இசுலாமிய அமைப்புகள் இன்று நான்காவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இன்று நடைபெற்றுவரும் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்  தொடரின் போது கூட இதுகுறித்து முதல்வர் பேசியிருந்தார்.
 
இந்நிலையில்,இன்று நடைபெற்று வரும் போராட்டத்தின்போது, ஒரு இஸ்லாமிய குடும்பத்தினரான்ப ஷயின்ஷா, சுமையா ஆகிய இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. அப்போது, கூட்டத்தில் பேசிய, மணமகன்  மற்றும் மணமகள்  தங்களுக்கு ஒருவரை ஒருவர் பிடித்திருக்கிறது; ஆனால் குடியுரிமை திருத்தச் சட்டம் பிடிக்கவில்லை என கூறினர்.
 

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments