Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தி.நகர் சரவணா ஸ்டோருக்கு வெடிகுண்டு மிரட்டல் ; பொதுமக்கள் வெளியேற்றம்

Webdunia
சனி, 24 மார்ச் 2018 (16:44 IST)
சென்னை ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர் கடைக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 
சரவணா ஸ்டோர் நிறுவனம் சென்னை, நெல்லை உட்பட பல ஊர்களும் கடைகளை திறந்துள்ளனர். சென்னையில் மட்டுமே பல இடங்களில் இவர்களின் கிளை இருக்கிறது. அனைத்தும் ஓரே இடத்தில் வாங்க முடியும் என்பதால் இந்த கடைகளில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.
 
குறிப்பாக சென்னை ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர் மிகவும் பிரபலமானது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள்.
 

இந்நிலையில், இந்த கடைக்கு சில மர்ம நபர்கள் இன்று மாலை வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து, போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. மேலும், கடையில் இருந்த வாடிக்கையாளர்கள் வெளியேற்றப்பட்டனர். அதைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஒவ்வொரு தளத்திலும் சோதனை செய்யப்பட்டு வருகிறது. 
 
இந்த விவகாரம் ரங்கநாதன் தெருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments