Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. பயணிகள் அதிர்ச்சி..!

Mahendran
திங்கள், 27 மே 2024 (10:03 IST)
சென்னை விமான நிலையத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகவும், இரவு மற்றும் அதிகாலை என 2 இ-மெயில்களில் வந்த வெடிகுண்டு மிரட்டல் காரணமாக பயணிகள் அதிர்ச்சி அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
சென்னை விமான நிலையத்திற்கு வந்த இ-மெயிலில் 5 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், ஒவ்வொன்றாக வெடிக்கும் எனவும் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் விமான நிலையம் முழுவதும் ஆய்வு செய்தனர்.
 
அதன்பின் விசாரணையில் போலி மிரட்டல் என தெரியவந்த நிலையில், இ-மெயில் அனுப்பியவரை போலீசார் தேடி வருவதாகவும், ஐபி முகவரியை வைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் சைபர் க்ரைம் போலீசார் ஈடுபட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
கடந்த சில மாதங்களாகவே விமான நிலையம் மற்றும் அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரமுகர்கள் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வருவதும் அதன்பின் அது வெறும் வதந்தி என தெரிய வந்து கொண்டிருப்பதும் பார்த்து வருகிறோம். 
 
இவ்வாறு வெடிகுண்டு மிரட்டல் விடும் நபர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் டெபாசிட் இழந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்.. அதிமுக, பாஜக ஓட்டு கிடைக்கவில்லையா?

மீண்டும் 14 தமிழகம் மீனவர்கள் கைது.. இலங்கை கடற்படையின் தொடரும் அட்டூழியம்..!

கரிபியன் கடலில் 8.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை..

பாஜக-வுக்கு எதிரான ஆம் ஆத்மியின் போராட்டம் தொடரும்: டெல்லி முதல்வர் அதிஷி

ஈகோவால் இழந்த கூட்டணி .. தலைநகரை தவறவிட்ட ஆம் ஆத்மி..!

அடுத்த கட்டுரையில்
Show comments