விஜய் பொதுக்கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்தவர் விடுவிப்பு: என்ன காரணம்?

Mahendran
புதன், 10 டிசம்பர் 2025 (11:20 IST)
புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சார பொதுக்கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்த நபர் ஒருவரை போலீசார் விசாரணைக்கு பின் விடுவித்தனர்.
 
சிவகங்கை கிழக்கு மாவட்ட தவெக செயலாளர் மருத்துவர் பிரபுவின் தனி பாதுகாவலரான டேவிட் என்பவரே துப்பாக்கியுடன் இருந்தவர் ஆவார். மருத்துவர் பிரபுவுக்கு அரசு அனுமதியுடன் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
ஆனால், தொண்டர்கள் வரும் வழியில் துப்பாக்கியுடன் அவர் தனியாக வந்ததால், புதுச்சேரி ஒதியஞ்சாலை போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். விசாரணையில், அவர் மத்திய சி.ஆர்.பி.எஃப். படையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் என்பதும், துப்பாக்கிக்கான சரியான உரிமம் வைத்திருந்தார் என்பதும் தெரிய வந்தது.
 
உரிமம் இருந்த காரணத்தால் டேவிட் விடுவிக்கப்பட்டாலும், விசாரணை முடிவடையும் வரை அவரது துப்பாக்கி போலீஸ் வசம் ஒப்படைக்கப்படும் என்று புதுச்சேரி போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கூட்டத்தில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

பாலியஸ்டரை பட்டு என ஏமாற்றி திருப்பதி கோவிலுக்கு விற்பனை.. 10 ஆண்டுகால மோசடி கண்டுபிடிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments