Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக முன்னாள் மாவட்ட நிர்வாகி தாக்குதல்: 9 பேரை தேடி வரும் போலீசார்..!

Siva
சனி, 11 மே 2024 (08:24 IST)
திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் பாஜக முன்னாள் மாவட்ட நிர்வாகியை தாக்கிய மற்றொரு பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்ட நிலையில் பாஜக பொதுச் செயலாளர் செந்திலரசன் உள்ளிட்ட 9 பேரை போலீசார் தேடி வருகின்றனர் என்று செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த 3 நாட்களுக்கு முன் பாஜக மாவட்ட விவசாய பிரிவு முன்னாள் தலைவர் மதுசூதனன் மீது மர்ம கும்பல் சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் தொடர்பான புகாரில் பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கர், பொதுச் செயலாளர் செந்திலரசன் உள்ளிட்டோரை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் தாக்குதல் வழக்கில் பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கர், கும்பகோணத்தை சேர்ந்த சரவணன், ஜெகதீசன் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் தாக்குதல் சம்பவம் நடந்த பகுதியில் சிசிடிவி காட்சிகளின் பதிவுகளை காவல்துறையினர் சோதனை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மதுசூதனன் தஞ்சை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரிடமும் காவல்துறையினர் விசாரணை செய்ததாகவும் தெரிகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments