Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆ.ராசா குறித்து அவதூறு பேச்சு: பாஜக பிரமுகருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

Webdunia
புதன், 21 செப்டம்பர் 2022 (10:01 IST)
ஆ.ராசா குறித்து அவதூறு பேச்சு: பாஜக பிரமுகருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்
திமுக எம்பி ஆர் ராசா குறித்து அவதூறாக பேசிய பாஜக பிரமுகருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 
சமீபத்தில் திமுக எம்பி ஆ ராசா இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக குற்றஞ்சாட்டப் பட்டது. இதனையடுத்து இந்து அமைப்புகள் மற்றும் பாஜகவினர் ஆ ராசாவை கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். 
 
இந்த நிலையில் கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி என்பவர் திமுக எம்பி ஆ ராசா குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு பதிவு செய்யப் பட்டது
 
இதனையடுத்து பாலாஜி உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டதோடு அவரை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அவருக்கு 15 நாள் காவல் என உத்தரவு பிறப்பித்துள்ளது
 
இரு குழுக்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பாலாஜி உத்தமராமசாமி பேசியதாக அவர் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments