Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்சியில் துணிக்கடைகளை கொளுத்திவிட்ட பாஜக தொண்டர்கள்

Webdunia
வெள்ளி, 24 மே 2019 (19:13 IST)
பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றதை வெடி வெடித்து கொண்டாடிய பாஜகவினரால் நான்கு துணிக்கடைகள் எரிந்து சாம்பலாகின.

மணப்பாறை அருகே உள்ள புத்தாநத்தத்தில் பள்ளிவாசலுக்கு சொந்தமான கட்டிடத்தில் நான்கு துணிக்கடைகள் உள்ளன. பாஜக வெற்றிபெற்றதை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள பாஜகவினர் வெடி வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடி உள்ளனர். பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட தீ துணிக்கடையில் பரவி மற்ற கடைகளுக்கும் பரவியுள்ளது. தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைப்பதற்குள் முழுவதும் எரிந்து நாசமடைந்தன. இதில் கோபம் கொண்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பிறகு போலீஸார் அங்கு வந்து இரு தரப்பினரிடையே பேசி சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் மணப்பாறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments