Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெபமாலை, மெழுகுவர்த்தி கொடுத்து வாக்குசேகரிக்கும் பாஜக! – கோவையில் சுவாரஸ்யம்!

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (10:24 IST)
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு கோவை கருமத்தம்பட்டி பகுதியில் கிறிஸ்தவ பொருட்களை கொடுத்து பாஜகவினர் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இன்றுடன் வாக்குசேகரிப்புக்கான அவகாசம் முடிவடையும் நிலையில் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் 10 வார்டுகளில் பாஜக போட்டியிடுகிறது. இந்த நகராட்சியில் 8 வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிடும் பெரியசாமி என்பவர் சிறுபான்மையினர் வாக்குகளை கவர்வதற்காக ஜெபமாலையுடன் கூடிய சிலுவையும், இரு மெழுகுவர்த்திகளையும்  பிளாஸ்டிக் தட்டில் வைத்து கொடுத்து வாக்குகளை சேகரித்து வருகிறார்.

பாரதி ஜனதா கட்சி சிறுபான்மையினருக்கு எதிராக  செயல்படுவதாக கடும் விமர்சனங்கள் இருந்து வரும் நிலையில் அவர்களை கவரும் விதமாக கிறிஸ்தவ பொருட்களை கொடுத்து பாஜக வேட்பாளர் வாக்கு சேகரித்து வருவது வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments