Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொத்துக்குவிப்பு வழக்கு: ஜெயலலிதா உட்பட 4 பேரும் குற்றவாளிகள் மற்றும் தண்டனை விபரம்

Webdunia
சனி, 27 செப்டம்பர் 2014 (17:41 IST)
பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம்சாற்றப்பட்ட 4 பேருக்கும் நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
 
பெங்களூரு பரப்பன அக்ரஹார நீதிமன்றத்தில் நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்துள்ளார்.
 
வழக்கில் தொடர்புடைய சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இவர்கள் 3 பேருக்கும் தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
 
இந்தத் தீர்ப்பின் மூலம் ஜெயலலிதா தமிழக முதலமைச்சர் பொறுப்பிலிருந்து விலகுகிறார். மேலும், அவர் இனிமேல் தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்குள் தண்டனை பெற்றால் தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் இல்லை. 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றால் மேல் நீதிமன்றம் சென்று தண்டனையை குறைக்கவோ அல்லது விடுதலை பெறவோ செய்யாமல் தேர்தலில் நிற்க முடியாது.

ரிசல்ட்டுக்கு முன்பாக தமிழகம் வரும் பிரதமர் மோடி! குமரியில் தியானத்தில் ஆழ்கிறார்?

அரசு வேலை வாங்கித் தருகிறேன்.! தாசில்தார் என கூறி பல லட்சம் மோசடி.! கார் ஓட்டுநர் கைது..!!

காதலிக்கு இறுதிச்சடங்கு செய்ய காசில்லை.. பிணத்தை சாலையில் போட்டு சென்ற லிவ்-இன் காதலன்!

ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் மனு ஒத்திவைப்பு..! மே 30-ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிமன்றம்..!

சவுக்கு சங்கரை போல் பிரகாஷ்ராஜை கைது செய்ய வேண்டும்: நாராயணன் திருப்பதி..!

Show comments