Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்திரபாபு கைதுக்கு எதிர்ப்பு... சட்டசபையில் விசில் அடித்த பாலகிருஷ்ணா..!

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (13:06 IST)
சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து ஆந்திர சட்டசபையில் தெலுங்கு தேச எம்எல்ஏ நடிகர் பாலகிருஷ்ணா விசில் அடித்து ரகளை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
ஊழல் வழக்கில் சமீபத்தில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவரது கைதுக்கு தெலுங்கு தேச கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்
 
இந்த நிலையில் இன்று சட்டசபை கூடியவுடன் சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து விசில் அடித்து பாலகிருஷ்ணா  தனது எதிர்ப்பை தெரிவித்தார். விசிலை ஊதி தனது எதிர்ப்பை தெரிவித்ததை அடுத்து சபாநாயகர் அவரை அமைதியாக இருக்கும்படி வலியுறுத்தினார். 
 
ஆனாலும் பாலகிருஷ்ணா தொடர்ந்து விசில் ஊதியதால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது.  இதனை அடுத்து விதிமுறைகளை மீறி உறுப்பினர் பாலகிருஷ்ணா அநாகரிகமாக நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் எச்சரித்தார்.
 

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments