Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பக்ரீத் பண்டிகை - இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை!

J.Durai
திங்கள், 17 ஜூன் 2024 (13:24 IST)
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நாடெங்கும் நடைபெற்று வருகின்றது. 
 
சிவகங்கை ஈத்கா திடலில் சிவகங்கை நகரில் இருக்கக்கூடிய அனைத்து பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து பக்ரீத் பண்டிகையின் சிறப்பு தொழுகை மற்றும் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். 
 
இந்த சிறப்பு தொழுகையில் பெரியவர்கள், இளைஞர்கள், சிறார்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர் இன்று காலை 6- 45 மணிக்கு துவங்கிய இந்த சிறப்பு நிகழ்வு 8 மணி அளவில் நிறைவு பெற்றது. இந்த சிறப்பு தொழுகைக்குப் பின்னால் நபி இப்ராஹிம்  அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் ஆடுகளை அறுத்து அதனுடைய இறைச்சியை ஏழை எளியவர்களுக்கு  பங்கிட்டு கொடுக்கும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
 
இஸ்லாமியரின் சிறப்பு தொழுகையை முன்னிட்டு அந்த பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்த வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்..!

அல்ப Viewsக்கு ஆசப்பட்டு.. செல்போன் டவரில் எசக்கு பிசக்காக மாட்டிக் கொண்ட யூட்யூபர்! – போராடி மீட்ட போலீஸ்!

பிரதமர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!

விஜய் நீதிமன்றம் சென்று நீட் விலக்கு பெறட்டும்: தமிழக பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன்

நீட் தேர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு.! சென்னையில் திமுக மாணவர் அணி போராட்டம்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments