Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்டோ கட்டணத்தை மறு நிர்ணயம் செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

Webdunia
வெள்ளி, 9 அக்டோபர் 2015 (14:36 IST)
அடுத்த 2 மாதங்களில் ஆட்டோ கட்டணங்களை மறுநிர்ணயம் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப ஆட்டோ கட்டணத்தை மறு நிர்ணயம் செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
 
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆட்டோ கட்டணத்தை மறு நிர்ணயம் செய்ய ஓராண்டு கால அவகாசம் கொடுக்கும்படி தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 
 
இதைத் தொடர்ந்து, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அடுத்த இரண்டு மாதத்துக்குள் ஆட்டோ கட்டணத்தை மறு நிர்ணயம் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடார்.
 
இந்நிலையில், அடுத்த இரண்டு மாதங்களில் ஆட்டோ கட்டணம் மறு நிர்ணயம் செய்யப்பட்டு, ஆட்டோ கட்டணம் உயர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments