Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்டோக்களில் பள்ளி மாணவர்கள் செல்ல தடையா? பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை..!

Mahendran
சனி, 11 மே 2024 (16:57 IST)
ஆட்டோக்களில்  பள்ளி மாணவர்கள் செல்ல தடை விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
ஜூன் மாதம் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட இருக்கும் நிலையில் பள்ளி வாகனங்கள் தற்போது அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்டு வருகிறது என்றும் பள்ளி பேருந்துகளில் இருக்கும் குறைகளை நிவர்த்தி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. 
 
இந்த நிலையில் ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்களில் அதிக அளவில் பள்ளி மாணவர்களை ஏற்றிக் கொண்டு செல்வதால் விபத்து ஏற்படுகிறது என்றும் இதனால் எதிர்பாராத உயிரிழப்பு ஏற்படுகிறது என்று பல புகார்கள் வந்துள்ளன. 
 
இந்த நிலையில் இது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் இன்று ஆலோசனை செய்து வருவதாகவும் அனேகமாக ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்களில் பள்ளி மாணவர்களை ஏற்ற தடை என்ற அறிவிப்பு வெளிவர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று லட்சம் பேர்களுக்கு பதவி.. விஜய் முடிவால் தமிழகத்தில் பரபரப்பு..!

பிளஸ் 2 மாணவன் ஓட்டிய கார் விபத்து.. காஞ்சிபுரம் மூதாட்டி பரிதாப பலி..!

தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் ஹிந்தி சான்றிதழ் வகுப்பு படிக்கிறார்கள்: ஆர் எஸ் எஸ் தகவல்

இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்! காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்த மீனவர்கள்!

திமுக, பாஜக இரண்டு கட்சிகளுக்கும் புரிதல் இருக்கிறது: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments