Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆகஸ்ட் 29ம் தேதி உள்ளூர் விடுமுறை: 2 மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு..!

Webdunia
வியாழன், 10 ஆகஸ்ட் 2023 (07:38 IST)
கேரளாவில் ஓணம் பண்டிகை மிகவும் சிறப்பாக இந்த மாதம் கொண்டாட இருக்கும் நிலையில் ஆகஸ்ட் 29ஆம் தேதி சென்னை மற்றும் கோவை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர். 
 
சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஓணம் பண்டிகையை முன்னிட்டு 29.08.2023, செவ்வாய்க்கிழமை சென்னை மாவட்டத்துக்கு அரசு ஆணைப்படி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. மேற்படி உள்ளூர் விடுமுறைக்குப் பதில் 02.09.2023 சனிக்கிழமை அன்று சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணி நாளாக அறிவிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
 
இதே போல் கோவை மாவட்ட ஆட்சித் தலைவரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை என அறிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.. மம்தா பானர்ஜி வலியுறுத்தல்..!

சென்னையில் நாய் பிடிக்கும் பணிகள் தொடக்கம்.. மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி..!

NDA கூட்டணிக்கு ஆதரவு கிடையாது.! பிஜு ஜனதா தளம் அதிரடி அறிவிப்பு..!!

திருச்செந்தூர் கடலில் 5 சவரன் சங்கிலியை தொலைத்த பெண்..! மீட்டு கொடுத்த தொழிலாளர்களுக்கு நன்றி..!

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.! தந்தை உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வெறிசெயல்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments