Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினகரன் ஆதரவாளர் வீட்டின் மீது தாக்குதல்!

Webdunia
செவ்வாய், 26 டிசம்பர் 2017 (09:18 IST)
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். இதனால் அதிமுக கூடாரமே ஆடிப்போய் இருக்கிறது. இந்நிலையில் கோவையில் தினகரன் ஆதரவாளர் வீட்டின் மீது தாக்குதல் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் நடந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட தினகரன் இமாலய வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பழனிசாமி தலைமையிலான மனுசூதனன் தோல்வி அடைந்தார். அதிமுக அணியில் இருக்கும் சிலர் தினகரனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து   அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தினகரன் ஆதரவாளர்கள் சிலரை கட்சி பதவியிலிருந்தும், சிலரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கினர்.
இதனையடுத்து கோவை மாவட்டம் ரத்தினபுரி பகுதியை சேர்ந்த தினகரன் ஆதரவாளரான மணியன், ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றி பெற்றதை பட்டாசு வெடித்துக் கொண்டாடியதாகவும் முதல்வர் அணியில் இருக்கும் சிலருக்கு அது பிடிக்காமல் தனது வீட்டுக்குள் புகுந்து பொருட்களை அடித்து நொறுக்கி, தனது மனைவியையும் அடித்துள்ளதாக கூறியுள்ளார். இது தொடர்பாக போலீஸில் புகார் அளித்துள்ளதாக மணியன் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments