Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.100 எடுக்க போனால் ரூ.500 கொடுக்கும் ஏடிஎம்... குவிந்த மக்களால் அதிர்ச்சி அடைந்த வங்கி நிர்வாகம்..!

Mahendran
வெள்ளி, 24 மே 2024 (18:35 IST)
100 ரூபாய் எடுக்க போனால் 500 ரூபாய் வாரி வழங்கும் ஏடிஎம்-ஐ நோக்கி பொதுமக்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் என்ற பகுதியில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம்மில் 100 ரூபாய் எடுக்க சென்ற ஒருவருக்கு 500 ரூபாய் தாள் வரவே அவர் இன்ப அதிர்ச்சி அடைந்தார். இந்த தகவல் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியில் பரவிய நிலையில் எல்லோரும் ஏடிஎம் கார்டை எடுத்துக்கொண்டு அந்த மிஷினை நோக்கி வந்தனர்.

இதனால் அந்த ஏடிஎம் முன் கூட்டம் அதிகமானதை அடுத்து வங்கி நிர்வாகம் அதிர்ச்சி அடைந்து உடனே விசாரணை செய்தது. அப்போது ஏடிஎம் எந்திரத்தை திறந்து பார்த்தபோது 100 ரூபாய் தாள்கள் வைக்க வேண்டிய இடத்தில் கவனக்குறைவாக 500 ரூபாய் தாள்கள் வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.

இதனால்தான் 100 ரூபாய்க்கு பதிலாக 500 ரூபாய் வந்துள்ளது. இதுவரை இரண்டரை லட்சம் ரூபாய் வரை பணம் எடுக்கப்பட்டு இருப்பதாகவும் இதனை அடுத்து வாடிக்கையாளர் திருப்பி கொடுக்க வேண்டும் என்று வங்கி நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. திருப்பி கொடுக்காத வாடிக்கையாளரின் வங்கி கணக்குகள் ஆய்வு செய்யப்படும் என்றும் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments