கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் இன்று தொடக்கம்..! மாணவ மாணவிகள் உற்சாகம்..!

Webdunia
திங்கள், 3 ஜூலை 2023 (08:30 IST)
தமிழ்நாட்டில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
தமிழகத்தில் 164 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் உள்ள 7,299 இளநிலை படிப்புகளுக்கான சேர்க்கை கடந்த சில மாதங்களாக நடைபெற்றது. 
 
கடந்த மே மாதம் தரவரிசை வெளியிடப்பட்ட நிலையில் மாணவ மாணவிகளின் கலந்தாய்வு இரு கட்டங்களாக நடந்து மாணவ மாணவிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. 
 
இந்த நிலையில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்குகிறது என கல்லூரி கல்வி இயக்குனரகம்  தெரிவித்துள்ளது. 
 
மாணவர்களை வரவேற்க கல்லூரிகளில் சிறப்பு ஏற்பாடு செய்திருப்பதாகவும் ராக்கிங் போன்ற அத்துமீறல்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்