Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமாவளவள், சீமான் கட்சிகளை தடை செய்ய வேண்டும்: அர்ஜூன் சம்பத்

Webdunia
செவ்வாய், 4 அக்டோபர் 2022 (14:11 IST)
தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் திருமாவளவன் மற்றும் சீமான் ஆகிய இருவரின் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்றும் இருவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் அர்ஜுன் சம்பத் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் ஆகியோர் பேசி வருவதாகவும் இதனை அடுத்து இருவரையும் கைது செய்து அந்த இருவருடைய கட்சிகளையும் தடை செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்
 
திருமாவளவன் சீமான் உள்ளிட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற  கோஷத்தையும் இந்து மக்கள் கட்சியின் தொண்டர்கள் எழுப்பினர்.
 
இந்த நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத் மத்திய அரசு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பை தடை செய்த பின்னரும் திருமாவளவன் சீமான் உள்ளிட்டோர் அந்த அமைப்பை ஆதரித்து பேசி வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

நீட் தேர்வு முறைகேடு.. 4 மாணவர்கள் கைது.. 9 மாணவர்களுக்கு சம்மன்..!

ஆப்பிள் மேல் அப்கிரேட்… மதுரையில் உலாவரும் வேன்!

2 வயது பச்சிளம் குழந்தை சர்க்கரை நோய்க்கு பலி.. தேனியில் அதிர்ச்சி சம்பவம்..!

தமிழகத்தில் ஜூன் 19 வரை மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

பாஜக தோல்விக்கு மாநில தலைவர் தான் காரணம்.. அரைநிர்வாண போராட்டம் நடத்தியவர் டிஸ்மிஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments