Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சகிப்புத்தன்மை பிரச்சனையை நானும் சந்தித்தேன் : ஏ.ஆர்.ரகுமான்

Webdunia
புதன், 25 நவம்பர் 2015 (16:20 IST)
சகிப்புத்தன்மை குறித்து பாலிவுட் நடிகர் அமீர்கான் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கும் சூழலில், நானும் அது போன்ற சூழ்நிலையை சந்தித்துள்ளேன் என்று இசையமைப்பாளர் கூறியுள்ளர்.


 
 
சமீபத்தில், சகிப்புத்தன்மை குறித்து நடிகர் அமீர்கான் தெரிவித்த கருத்திற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அவரது வீட்டின் முன்பு போராட்டங்களும் நடைபெற்றது. டெல்லியில், அமீர்கானுக்கு எதிராக போலீஸில் புகாரும் கொடுக்கப்பட்டது.
 
இந்நிலையில், இது போன்ற சூழ்நிலையை நானும் சந்தித்தேன் என்று ஏ.ஆர்.ரகுமான் கருத்து தெரிவித்தார். 
சில மாதங்களுக்கு முன் ஈரானிய திரைப்படமான  “முகம்மது மெஸேஞ்சர் ஆப் காட்” என்ற திரைப்படத்துக்கு ரகுமான் இசை அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவருக்கு எதிராக பத்வா விதிக்கப்பட்டது.
 
கோவாவில் நடைபெற்ற  நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ரகுமான், அந்த சம்பவத்தை குறிப்பிட்டார். மேலும் அவர் பேசும் போது “நாம் எதையும் அழகாக கையாளவேண்டும். மற்ற நாடு மக்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும். ஏனெனில், நாம் மகாத்மா காந்தி வாழ்ந்த  மண்ணில் இருந்து வருகிறோம் ” என்று கூறினார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments