கலை, அறிவியல் கல்லூரிகளில் தனித்தனியாக விண்ணப்பம் இல்லை: ஒற்றைச் சாளர முறை அமல்?

Mahendran
வியாழன், 28 மார்ச் 2024 (11:03 IST)
மருத்துவம், பொறியியல் படிப்புகள் போல, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளிலும் ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடத்த பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கல்லூரிகளிலும் தனித்தனியாக விண்ணப்பிக்கும் செய்யும் முறைக்கு மாற்றாக Single Window System கீழ் மாணவர் சேர்க்கை வரும் கல்வியாண்டு முதல் நடத்தப்பட உள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கல்லூரிக் கல்வி இயக்குநர் தலைமையில் 06.03.2024 அன்று கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் நடைபெற்ற அரசு உதவிபெறும் கல்லூரி முதல்வர்கள் கூட்டத்தில், அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு பின்பற்றப்படும் ஒற்றை சாளர முறை (Single Window System), போன்று அரசு உதவிபெறும் கல்லூரிகளின், உதவிபெறும் பாடப்பிரிவு மாணவர் சேர்க்கைக்கும் ஒற்றைச் சாளர முறையிலான மாணக்கர் சேர்க்கையை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கல்லூரி முதல்வர்களின் ஆலோசனைக்குப் பின், அக்கூட்டத்தில், அரசு உதவிபெறும் கல்லூரிகளில் உள்ளஅரசு உதவிபெறும் பாடப்பிரிவிற்கான மாணவர் சேர்க்கையை ஒற்றை சாளர முறையில் (Single Window System) பின்பற்றுவது தொடர்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரி முதல்வர்களை கொண்டு குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை பெற்று செயல்படலாம் என முடிவு செய்யப்பட்டது.

அதற்கிணங்க மேற்காண் பொருள் தொடர்பாக விரிவான ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்க ஏதுவாக குழு அமைக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனிதர்கள் இதுவரை பார்க்காத நிலவின் அற்புதமான புகைப்படம்.. Artemis II திட்டத்தில் சாதனை..!

ராஜஸ்தானின் தார் பாலைவனத்தில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழை.. விவசாயிகள் சோகம்..!

ஈரானில் சிக்கித் தவித்த 345 இந்திய மீனவர்கள்.. ஆர்மீனியா வரை சாலை பயணம்.. பின்னர் விமானத்தில் சென்னை வருகை..!

விஜய் வேட்புமனுவில் மீண்டும் குளறுபடி.. ஒரே வாரத்தில் 6 கோடி ரூபாய் சொத்து மதிப்பு உயர்ந்ததா?

சிந்திக்கும் இளைஞர்கள் கூட்டம் திமுக பக்கமே உள்ளனர்.. அமைச்சர் மா சுப்பிரமணியன்

அடுத்த கட்டுரையில்
Show comments