Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் சகஜமாக பேசி வருகிறார் : அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை

முதல்வர் சகஜமாக பேசி வருகிறார் : அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை

Webdunia
வெள்ளி, 21 அக்டோபர் 2016 (19:14 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து, சென்னை அப்பல்லோ நிர்வாகம், புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. 


 

 
முதல்வர் ஜெயலலிதா, கடந்த மாதம் 22ம் தேதியிலிருந்து, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். நீர்ச்சத்து குறைபாடு, சுவாச பிரச்சனை ஆகிய இருப்பதாக இதற்கு முன் வெளிவந்த அப்பல்லோ அறிக்கைகள் கூறின. 
 
கடைசியாக கடந்த 10ம் தேதி, அப்பல்லோ தனது கடைசி அறிக்கையை வெளியிட்டது. அதில் முதல்வருக்கு தொடர் சிகிச்சை தேவைப்படுவதால், அவர் மருத்துவமனையில் இன்னும் பல நாட்கள் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்பின் கடந்த 10 நாட்களாக, மருத்துவமனை சார்பாக எந்த அறிக்கையும் வெளியாகவில்லை. 
 
இந்நிலையில், இன்று ஒரு புதிய அறிக்கையை அப்பல்லோ தற்போது வெளியிட்டுள்ளது. இது அப்பல்லோ வெளியிடும் 10வது அறிக்கையாகும்.
 
அந்த அறிக்கையில் “முதல்வருக்கு  தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்கு அவரின் உடல்நிலை நல்ல ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. பிசியோதெரபி, இதய, சுவாச சிகிச்சை நிபுணர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஊட்டச்சத்து நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  
 
அவரின் உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. அவர் எங்களிடம் சகஜமாக பேசி வருகிறார்” என்று கூறப்பட்டுள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments